'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்தவர், ஏர்ஹோஸ்டாக பறந்து கொண்டிருந்தவர் இப்போது பிசியான சீரியல் நடிகை.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு வாணி ராணி, வம்சம், சுந்தரகாண்டம் உள்பட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது என் இனிய தோழியே தொடரில் ஹீரோயினியாகி இருக்கிறார்.
இதுபற்றி ரேஷ்மா கூறியதாவது: பல சீரியல்களில் வேறு வேறு கேரக்டர்களில் நடிப்பதை விட ஒரே சீரியலில் ஹீரோயினாக நடிப்பதுதான் நல்லது. முழு கவனத்தையும் அந்த கேரக்டருக்கு கொடுக்க முடியும். ஆனாலும் சீரியல் ஹீரோயினாக தொடர கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் ஹிரோயின் இல்லாத எபிசோடே இருக்க முடியாது. தற்போது நடிக்கும் என் உயிர் தோழியே சீரியல் சமூக பிரச்னையை பேசும் சீரியல், ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார்கள். இயக்குனர் செந்தில்குமாரும், தயாரிப்பாளரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்கிறார் ரேஷ்மா.