ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்தவர், ஏர்ஹோஸ்டாக பறந்து கொண்டிருந்தவர் இப்போது பிசியான சீரியல் நடிகை.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு வாணி ராணி, வம்சம், சுந்தரகாண்டம் உள்பட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது என் இனிய தோழியே தொடரில் ஹீரோயினியாகி இருக்கிறார்.
இதுபற்றி ரேஷ்மா கூறியதாவது: பல சீரியல்களில் வேறு வேறு கேரக்டர்களில் நடிப்பதை விட ஒரே சீரியலில் ஹீரோயினாக நடிப்பதுதான் நல்லது. முழு கவனத்தையும் அந்த கேரக்டருக்கு கொடுக்க முடியும். ஆனாலும் சீரியல் ஹீரோயினாக தொடர கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் ஹிரோயின் இல்லாத எபிசோடே இருக்க முடியாது. தற்போது நடிக்கும் என் உயிர் தோழியே சீரியல் சமூக பிரச்னையை பேசும் சீரியல், ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார்கள். இயக்குனர் செந்தில்குமாரும், தயாரிப்பாளரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்கிறார் ரேஷ்மா.