டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்தவர், ஏர்ஹோஸ்டாக பறந்து கொண்டிருந்தவர் இப்போது பிசியான சீரியல் நடிகை.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு வாணி ராணி, வம்சம், சுந்தரகாண்டம் உள்பட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது என் இனிய தோழியே தொடரில் ஹீரோயினியாகி இருக்கிறார்.
இதுபற்றி ரேஷ்மா கூறியதாவது: பல சீரியல்களில் வேறு வேறு கேரக்டர்களில் நடிப்பதை விட ஒரே சீரியலில் ஹீரோயினாக நடிப்பதுதான் நல்லது. முழு கவனத்தையும் அந்த கேரக்டருக்கு கொடுக்க முடியும். ஆனாலும் சீரியல் ஹீரோயினாக தொடர கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் ஹிரோயின் இல்லாத எபிசோடே இருக்க முடியாது. தற்போது நடிக்கும் என் உயிர் தோழியே சீரியல் சமூக பிரச்னையை பேசும் சீரியல், ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார்கள். இயக்குனர் செந்தில்குமாரும், தயாரிப்பாளரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்கிறார் ரேஷ்மா.