அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
ஆர்ஜே வைஷ்ணவி சின்னத்திரையில் பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு பிரபலமானார். அஞ்சான் என்பவரை காதலித்து வந்த வைஷ்ணவி, கடந்த 2019ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 வருடங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், வைஷ்ணவி அஞ்சானை விட்டு பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆறு வருடமாக அஞ்சானுடன் இணைந்து வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து, நாங்கள் இருவரும் இப்போது பிரிவதாக முடிவு செய்துள்ளோம். நான் இப்போதும் அவரை காதலிக்கிறேன் ஆனாலும், உறவின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் எங்களை நாங்களே இழக்காமல் இருக்க வேண்டுமென தீர ஆலோசனை செய்துவிட்டு அதன்பின்னர் பிரிவதாக முடிவெடுத்துள்ளோம். எங்களுக்குள் பல பொதுவான மற்றும் பகிர்ந்துகொண்ட விருப்பங்கள் அனைத்தும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்களாக இருப்பதற்கு மட்டுமே உதவும் என்பதை இப்போது புரிந்துகொண்டோம். எங்களுக்குள் எந்தவித மனக்கசப்பும் இல்லை. தேவையில்லாமல் எதையும் யூகித்து பரப்ப வேண்டாம்.' என அதில் தெரிவித்துள்ளார்.