தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. பெண்களின் ஆளுமையை பறைசாற்றும் வகையில் புதிய கதைக்களத்துடன் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இதில், கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா ஆகியோருடன் வெள்ளித்திரை நடிகரான மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடருக்கான வசனத்தை முன்னாள் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா எழுதி வருகிறார். மக்கள் மத்தியில் அனைத்து வகையிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த தொடர் தற்போது 100-வது எபிசோடை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் எதிர்நீச்சல் தொடரின் இயக்குநர் திருச்செல்வம், வசனகர்த்தா ஸ்ரீ வித்யா ஆகியோருடன் நான்கு முன்னணி நடிகைகள் மற்றும் குழுவினர் இணைந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து கொண்டாடியுள்ளனர். தற்போது அதன் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.