ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் 'யாரடி நீ மோகினி'. இதில் ஹீரோவாக ஸ்ரீகுமாரும், வில்லியாக சைத்ரா ரெட்டியும் அசத்தியிருந்தனர். அதிலும் சைத்ரா ரெட்டியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. ரசிகர்களின் பெருத்த ஆதரவுக்கு மத்தியில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அந்த தொடர் சில மாதங்களுக்கு முன்னர் தான் நிறைவுற்றது. இந்நிலையில் சைத்ரா ரெட்டியும், ஸ்ரீகுமாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சேர்ந்து எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைபார்த்துவிட்டு இருவரும் புது சீரியலில் நடிக்கிறார்களா? அல்லது யாரடி நீ மோகினி சீசன் 2 வருகிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், உண்மையில் அவர்கள் எந்த புதிய சீரியலிலும் சேர்ந்து நடிக்கவில்லை. யாரடி நீ மோகினி முடிவுற்ற பின் சைத்ரா ரெட்டி 'கயல்' தொடரிலும், ஸ்ரீகுமார் 'வானத்தைப் போல' தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களுமே ஒரே டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள். எனவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து கொண்ட இருவரும் நட்பின் அடிப்படையில் செல்பி எடுத்துக் கொண்டு பகிர்ந்துள்ளனர்.