ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் 10 படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. இதில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜூமேனன் நடிக்கும் படமும் ஒன்று. மோகன்லால் நடிப்பில் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்று படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
பிரியதர்ஷன் இயக்கும் முதல் ஆந்தாலஜி படம் இதுதான்.. அதேசமயம் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை வருடங்கள் மலையாள சினிமாவில் ஒன்றாக பயணிக்கும் பிரியதர்ஷனும் பிஜூமேனனும் முதன் முறையாக கூட்டணி சேரும் படமும் இதுதான். இந்த ஆந்தாலாஜி தொடரில் சந்தோஷ்சிவன், ஷ்யாம் பிரசாத், ஜெயராஜ் உள்ளிட்ட இயக்குனர்களும் படம் இயக்க உள்ளார்கள்.