இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மதயானை கூட்டம் படம் மூலம் அறிமுகமாகி பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனிக்க வைத்தவர் கதிர். விக்ரம் வேதா , பிகில் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கதிர் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் கதிருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், கதிருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
கதிருடன் இருக்கும் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ், ‛‛கதிர் 3.0, பிறந்தநாள் வாழ்த்துக்கள். அற்புதமான ஆண்டாக அமையட்டும் நண்பரே'' என்று குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியான இப்படங்கள் வேகமாக வைரலாகி வருகிறது.
இருவரும் இணைந்து நடித்ததில்லை. ஆனால் கடந்தாண்டு கடற்கரையில் இருவரும் இருக்கும் படங்கள் வெளியானதால் இருவருக்கும் இடையே காதலா என அப்போதே காதல் கிசுகிசு எழுந்தது. இப்போது மீண்டும் அது போன்றதொரு புகைச்சல் சமூகவலைதளங்களில் கிளம்பி வருகிறது.