கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் நடிகர் ரன்வீர் சிங் - நடிகை தீபிகா படுகோனே. காதலித்து, மணந்து கொண்ட இவர்கள் சினிமா, விளம்பரம் என பிஸியாக உள்ளனர். மும்பையில் கடற்கரை ஏரியாவான அலிபாக் பகுதியில் ரூ.22 கோடிக்கு ஆடம்பர சொகுச பங்களாவை வாங்கி உள்ளனர். 2.25 ஏக்கர் பரப்பளவு உடைய இந்த சொத்தில் 18 ஆயிரம் சதுர அடிக்கு வீடு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளது. செப்., 13ம் தேதி இந்த சொத்திற்கான பத்திரபதிவு நடந்துள்ளதாம். ஸ்டாம்ப் டூட்டியாக மட்டும் ரூ1.32 கோடி வரி செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடற்கரை பகுதியாக இந்த ஏரியா இருப்பதால் பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த ஏரியாவில் இதுபோன்று சொத்துக்களை வாங்கி வருகின்றனர். தற்போது மும்பையில் பிரபாதேவி பகுதியில் 4 மாடி கொண்டு குடியிருப்பில் தீபிகா, ரன்வீர் வசித்து வருகின்றனர். இந்த சொத்துக்கள் தவிர இவர்களுக்கு மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் சொத்துக்கள் உள்ளன.