இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் படம், பாண்டிராஜின் வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சமீபத்தில் காரைக்குடியில் இந்த படத்தின் 51 நாள் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்திருந்தார் இயக்குனர் பாண்டிராஜ். இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது குற்றாலத்தில் துவங்கியுள்ளது. மொத்தம் பத்து நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வரும் கிறிஸ்துமஸ் ரிலீஸாக வெளியாவதற்கு தயராகி வருகிறது.