நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
சென்னை: நடிகர் மம்மூட்டி, அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பட்டா நிலத்தை, கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழிபள்ளம் கிராமத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக, 40 ஏக்கர் நிலம் உள்ளது. இதை, கழுவேலி புறம்போக்கு நிலமாக வகைப்படுத்தி, நில நிர்வாக கமிஷனர், 2021 மார்ச்சில் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், நடிகர் மம்மூட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு, நீதிபதி பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, செப்., 27க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.