அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருக்கும். அந்நிய மண்ணில் அதுவும் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று பந்து வீசிய விதத்தைப் பார்த்து பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, நேற்றைய லார்ட்ஸ் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“மிகவும் சுவாரசியமாக உள்ளது” என கடைசி கட்ட பரபரப்பின் போதும், அடுத்து வெற்றி பெற்றதும், 'யெஸ்ஸ்ஸ்ஸ்” என்றும், பின்னர் “எப்பேர்ப்பட்ட வெற்றி, என்ன ஒரு அருமையான டீம்” என்றும் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.