மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இயல்பான நடிகை எனப் பெயரெடுத்தவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தமிழ் சினிமாவை இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தெலுங்கில் இவருக்கு சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நீலகிரியைச் சொந்த ஊராகக் கொண்ட சாய்பல்லவி அவருடைய தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். “வேர்கள், தாத்தாவின் 85வது,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தாத்தா, பாட்டி, தங்கை ஆகியோரது புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாய்பல்லவிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவரது பதிவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள்.
நெற்றியில் திருநீறு, தலையில் முல்லைப்பூவுடன், புடவையில் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளிக்கும் சாய் பல்லவியைப் பார்க்கும் போது 'ரவுடி பேபி' பாடலில் அப்படி ஆடியவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமையட்டும்.