ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பவர்புல் ஆளுமையாக இருப்பவர் கரண் ஜோஹர். தயாரிப்பாளர், இயக்குனர், கதாசிரியர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கும் 15வது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார். ஓடிடி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகஸ்ட் 8ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
இதுகுறித்து கரன் ஜோஹர் கூறியிருப்பதாவது: நானும் என் அம்மாவும் பிக்பாஸின் தீவிர ரசிகர்கள். ஒரு நாள் கூட நிகழ்ச்சியை தவறவிட மாட்டோம் அது எங்களுக்கு பெரிய பொழுதுபோக்காக இருந்தது. இப்போது நான் தொகுத்து வழங்கும்போதும் அதே உற்சாகத்துடன் செய்வேன். இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பு. என்றார்.