தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு நான்கு மாதங்களுக்கும் மேலாகிறது. தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து தியேட்டர்காரர்களுக்கும் தெரியவில்லை.
விசாரித்துப் பார்த்த வகையில் ஒரு சாரார் ஆகஸ்ட் மத்தியில் திறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள், மற்றொரு சாரார் தீபாவளிக்குத்தான் திறக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்றாலும் ஓடிடி தளங்களில் கடந்த நான்கு மாதங்களில் அதிகமான படங்கள் வெளியாகவில்லை.
ஆனால், தற்போது பல படங்களை ஓடிடி தளங்கள் பேசி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வாழ் படம் மூலம் புதிதாக களமிறங்கிய சோனி லிவ் ஓடிடி தளம் பல படங்களை பேசிக் கொண்டிருக்கிறதாம். அதோடு தெலுங்கில் அல்லு அர்ஜுன் குடும்பத்தினருக்குச் சொந்தமான "ஆஹா" ஓடிடி தளமும் தமிழில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாம்.
ஓடிடி தளங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான விலையை தர சம்மதிப்பதால் அவர்களும் படங்களைத் தர முன் வருகிறார்கள். இந்த ஓடிடி தளங்களின் போட்டி காரணமாக தியேட்டர் தொழிலுக்கு பாதிப்புகள் அதிகம் என பலர் கவலைப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.