அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ். கைவசம் தமிழிலேயே மூன்று படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் படத்தில் நடித்த இவர் விரைவில் வெளியாகவுள்ள விராட பர்வம் படத்திலும் சற்று நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
ராணா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி மற்றும் பிரியாமணி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் சாய்பல்லவியும், பிரியாமணியும் நக்சலைட்டாக நடித்துள்ளது போல, நிவேதா பெத்துராஜும் நக்சலைட் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.