Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்கள் திறந்தாலும் மக்கள் வருவார்களா ? 'வலிமை' வரவழைக்குமா ?

29 ஜூன், 2021 - 12:14 IST
எழுத்தின் அளவு:
If-theatres-open-Vallimai-will-bring-back-the-people?

கொரோனா தாக்கத்தால் பல தொழில்கள் மீண்டு வந்தாலும் சினிமா மட்டும் மீண்டும் பழைய நிலையைப் பெற முடியுமா என்ற சந்தேகம் சினிமா வட்டாரங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே பைரசி தளங்கள், அதிக டிக்கெட் கட்டணங்கள் என்ற பாதிப்பு இருந்தது. அதன் காரணமாக மக்கள் குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பது குறைவாகவே இருந்தது.

இந்நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தாக்கத்தின் முதல் அலை வந்ததால் தியேட்டர்கள் மூடப்பட்டன. அப்போது மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதத்தில்தான் 50 சதவீத இருக்கைகளுடன் மீண்டும் திறக்கப்பட்டன.

அந்த இடைப்பட்ட காலத்தில் ஓடிடி தளங்கள் ஒரு விஸ்வரூபம் எடுத்தன. முன்னணி நடிகர்களின் படங்களையும் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டார்கள். தியேட்டர்காரர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தாலும் அதையெல்லாம் மீறித்தான் படங்கள் வெளிந்தன.

இருப்பினும் தியேட்டர்களில்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் விஜய் காத்திருந்து அவரது 'மாஸ்டர்' படத்தை பொங்கலுக்கு வெளியிட்டார். 50 சதவீத இருக்கைகளிலேயே அப்படம் லாபத்தைப் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனால், 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வருவதற்குள்ளாகவே 'மாஸ்டர்' படமும் ஓடிடி தளத்தில் 16 நாட்களில் வெளியானது. அதன் பின்னும் தியேட்டர்களில் படம் ஓடியது வேறு கதை.

2020 நவம்பர் மாதம் திறக்கப்பட்ட தியேட்டர்கள் இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் 2021 ஏப்ரல் மாதக் கடைசியில் மூடப்பட்டது. தியேட்டர்களை மூடி இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த இரண்டு மாதங்களில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படம் தான் ஓடிடி தளத்தில் எதிர்பார்ப்புடன் வெளியான படம். ஆனால், அப்படமும் ரசிகர்களை ஏமாற்றியது.

தியேட்டர்களை ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே சமயம் மேலும் சில புதிய படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட உள்ளதாக அடிக்கடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஒரு பக்கம் மக்கள் ஓடிடி தளங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், தியேட்டர்களுக்குப் போய் படத்தைப் பார்க்க வேண்டுமா என ஒருவித சோம்பேறித்தமான மனநிலை வந்துவிடும். வீட்டிலேயே விருப்படி பார்க்க வசதி இருக்கிறதே என்ற எண்ணம் அதிகம் வரும்.

தியேட்டர்களில் தான் படங்களைப் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்கள் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயமில்லாமல் வர வாய்ப்புள்ளது. அதே சமயம் 18 வயதிலிருந்து 30 வயது வரை உள்ளவர்கள் தான் தியேட்டர்களுக்கு அதிகம் வரக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பலர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேயில்லை என்பதும் உண்மை.

அப்படியே அவர்கள் தியேட்டர்களுக்கு வந்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களைப் பார்க்கத்தான் ஆர்வம் காட்டுவார்கள். அதை 'மாஸ்டர்' படத்தை 50 சதவீத இருக்கைகளிலேயே வெற்றி பெற வைத்ததை உதாரணமாகச் சொல்லலாம்.

முதல் அலைக்குப் பிறகு விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தைத்தான் தியேட்டர்காரர்கள் அதிகம் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பு அவர்களுக்கு வீணாகவில்லை. அது போல, இரண்டாவது அலைக்குப் பின்னர் அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை வரவழைக்க முயற்சிக்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் 'வலிமை' படத்தை வெளியிடும் வகையில் அதன் தயாரிப்பாளருக்கு தியேட்டர்காரர்கள் அழுத்தம் கொடுக்கலாம். ஏற்கெனவே ரசிகர்கள் கொடுக்கும் 'வலிமை அப்டேட்'டிற்கே அவர் அசரவில்லை. அதே சமயம், தியேட்டர்காரர்கள் கொடுக்கும் அழுத்தம் அவரை மாற்ற வைக்கும்.

முதல் அலைக்கு 'மாஸ்டர்' மாஸ் காட்டியதென்றால், இரண்டாம் அலைக்கு 'வலிமை' மூலம் தியேட்டர்காரர்களின் 'வலி' பறந்து போகலாமே?.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் ... குழந்தை எப்போது? - விக்னேஷ் சிவன் பதில் குழந்தை எப்போது? - விக்னேஷ் சிவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

29 ஜூன், 2021 - 20:12 Report Abuse
MURPHYS LAW Varanumnu nenaikaranga kooda varamataanga
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
29 ஜூன், 2021 - 15:32 Report Abuse
கொக்கி குமாரு 10 வருடங்களுக்கு முன் சினிமா டிக்கெட் விலை 50 ரூபாய், இப்போது 150 ரூபாய். 10 வருடங்களுக்கு முன் சினிமா கதாநாயகன் சம்பளம் 20 கோடிகள் இப்போது 70 கோடிகள். ஆனால் ஜோசெப் விசய்க்கு 10 வருடங்களுக்கு முன் இருந்தது போல பெட்ரோல் விலை விற்கவேண்டும். விளங்கிடும். இவரை சொல்லி குற்றமில்லை. இவர் பின்னால் செல்லும் தமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளை சொல்லவேண்டும். இப்போது கொரோனா கால கட்டத்தில் பிணம் எரிப்பதற்கு கூட வரிசை. அதனால் மக்கள் அனைவரும் சினிமாவை தியேட்டரில் பார்ப்பதை தவிர்த்து ஜோசெப் விசயின் சம்பளம் ஒரு படத்திற்கு 70 கோடிகளில் இருந்து (ஏரியா விற்பனை உரிமை தனி) 7 லட்சமாக குறையும் வரை காத்திருக்கலாம். விசய் அண்ணா சொன்னதுபோல சிங்கப்பூர் போன்று தரமான இலவச மருத்துவமனைகள் இந்த கொரோனா காலகட்டத்தில் நம் நாட்டிற்கு தேவை. தவிரவும், சூர்யா அண்ணாவின் ஜோதிகா அண்ணியும் சொன்னது போல தரமான பள்ளிக்கூடங்கள் இந்த கால கட்டத்தில் நம் நாட்டிற்கு தேவை. அதனால் விசய் அண்ணாவின் சம்பளம் 7 லட்சம் போக மீதம் இருக்கும் 69 கோடியே 93 லட்சத்தில் தரமான மருத்துவமனைகளும், தரமான பள்ளி கூடங்களும், தரமான சுடுகாடு மற்றும் இடுகாடுகளும் பொது மக்கள் பயன் பெரும் வகையில் கட்டிக்கொடுக்கலாம். இந்த கருத்தை ஜோசெப் விசய் அண்ணாவும், சூர்யா அண்ணாவும், ஜோதிகா அண்ணியும் மற்றும் தமிழ் சினிமா ரசிக விசிலடிச்சான் குஞ்சு கிறுக்கு கண்மணிகளும் ஏற்று வழிமொழிவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
Rate this:
Somas Kandan - Farwaniya,குவைத்
29 ஜூன், 2021 - 14:01 Report Abuse
Somas Kandan வாய்ப்பில்லை ராஜா..
Rate this:
navasathishkumar - MADURAI,இந்தியா
29 ஜூன், 2021 - 13:27 Report Abuse
navasathishkumar ரொம்ப முக்கியம் ...தடுப்பூசி போடவே இன்னைக்கு ..உடலில் வலிமை இருந்துச்சு தல அன்னைக்கு ...நீங்க சூப்பர் ஸ்டார் ஆகி நிக்க நாங்க போலீஸ் கிடட அடி வாங்கி டிக்கெட் வாங்கி படம் பார்த்தோம் ...உங்களை பொலவே ரஜினி , விஜய் ன்னு பார்த்த பழைய கிட்ஸ் இல்லை இப்ப எல்லாம் ௨ கே கிட்ஸ் ...தியேட்டரை விட ஆப் ல படம் பார்க்துங்க . படிக்கிதுங்க ...அடுத்து இன்னைக்கு நீங்க அடிக்கிற வில்லன்கள் அரசியல் வாதிகள் , கொள்ளைகாரங்கள் மாதிரி இல்லை இன்னைக்கு செத்தா நாளைக்கு பால் ன்னு வந்திருக்கிற டெல்டா வைரஸ் .. ஆக்வே நிச்சயம் வெள்ளி திரை வேஸ்ட் ...ஆளுமா , தூளுமா ன்னு அநிருத்த விட்டு பாட்டு போட்டது ஹிட் டான் ஆனால் மனதில் சப்தம் இல்லாமல் தனிமை கேட்டேன் என்ற பாடல் மாதிரி மனதில் பதிய வில்லை .. டிஜிட்டல் சவுண்டு போய் புது ச ரரௌண்ட் சவுண்ட் வந்ததும் காது சவ்வு கிழியுது தியேட்டரில் அதுக்கு ஆப்பு தான் பெஸ்ட் ..அமேசான், அல்லது நெட் பிலீக்ஸில் விட்ருங்க ...ரசிக பிள்ளைகளை நம்பாதீங்க ...முதல் இரண்டு ஷோ மட்டும் தான் புள் ஆகும் மதுரையில் ..ஏன்னா நாங்களே இப்ப அலர்ட்டா இருக்கோம் வைரஸ் பீதியில் மாட்டு தாவணி பஸ் ஸ்டான்ட் பக்கம் போகாமே
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in