பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரணவத், அதற்கேற்றார்போல் சர்ச்சையான கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலிலும் மாட்டிக் கொள்கிறார். பின்விளைவுகள் பற்றி அறியாமல் அவர் கூறும் கருத்துக்களால் தற்போது அவருக்கு புதிதாக ஒரு சிக்கல் எழுந்துள்ளது.
ஊரடங்கு ஓரளவுக்கு தளர்வு பெற்றபின், படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல இருக்கிறார் கங்கனா. அவருடைய தற்போதைய பாஸ்போர்ட் செப்டம்பர் 13ல் காலாவதி ஆவதால் அதை முன்கூட்டியே புதுப்பிப்பதற்காக பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார் கங்கனா.
ஆனால் அவர் ஏற்கனவே தனது ட்விட்டரில், சர்ச்சையை தூண்டும் விதமாக கருத்துக்களை கூறியதாக, அவர் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளதால் விசாவை புதுப்பிக்க முடியாது என கூறிவிட்டார்கள் விமான நிலைய அதிகாரிகள். இதைத்தொடர்ந்து கங்கனாவும் அவரது சகோதரியும் தங்களுக்கு படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருப்பதை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி, பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான அனுமதி வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை மனு செய்துள்ளனர்.