டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என குறிப்பிடத்தக்க படங்களில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி, முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை அஞ்சலி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் தாக்குப்பிடித்து, தற்போதும் கைவசம் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக சமீபத்தில் வெளியான பவன்கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம், அஞ்சலி மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
இந்தநிலையில் புதிய நடிகைகளின் வரவால் தனது வாய்ப்பு குறைந்துள்ளதா என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளதாவது : “புதிய நடிகைகள், சீனியர் நடிகைகளின் வாய்ப்புகளை பறித்துக் கொள்கிறார்கள் என்று ஒருபோதும் நான் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன்.. காரணம் இயக்குனர் உருவாக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நமக்கான வாய்ப்பு இருந்தால் அந்த கதாபாத்திரம் நிச்சயம் எங்களை தேடித்தான் வரும். என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்யமுடியுமோ அதை மட்டும் சரியாக செய்தால் போதும்.. அதனால் வாய்ப்புகள் வரவில்லை என்பதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்