ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பிரியதர்ஷன். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் உருவாகி, தற்போது ரிலீசுக்கு தயாராக காத்திருக்கும் படம் 'மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம்'. மோகன்லால் அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட, பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த வரலாற்று படம் சமீபத்தில் கடந்த வருடத்திற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருது பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் பிரியதர்ஷன் இந்த படத்திற்காக தனக்கு கிடைத்த விருதை ஷோலே பட இயக்குனர் ரமேஷ் சிப்பி மற்றும் இயக்குனர் டேவிட் லீன் ஆகியோருக்கு சமர்ப்பணம் செய்வதாக அறிவித்துள்ளார். மிகப்பெரிய பிரேம்களை எப்படி வைக்க வேண்டும் என, அவர்களிடமிருந்து தான் கற்றுக் கொண்டதாகவும், அதனாலேயே அவர்களுக்கு இந்த விருதை காணிக்கையாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் பிரியதர்ஷன்.