'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நேற்று தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள போட்டோக்களில் அவருடைய கையில் போடும் தடுப்பூசி மட்டும் தெரிகிறது. நயன்தாராவுக்கு போடும் தடுப்பூசி தெரியவில்லை. வெறும் விரல்களால் ஊசி போடுவது போல 'போஸ்' கொடுத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
நயன்தாராவின் புகைப்படங்களைக் பகிர்ந்த பலரும் ஊசி எங்கே இருக்கிறது தெரியவில்லை, என்றே கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு முன்னணி நடிகையான நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டாரா அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் போட்டோ எடுத்துக் கொண்டாரா என பலரும் கேட்டு வருகிறார்கள்.
அதற்கு நயன்தாரா சரியான விளக்கம் கொடுப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.