விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
கடந்த ஆண்டில் கவுதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், திருமணத்திற்கும் பிறகு தொடர்ந்து நடித்து வருகிறார். தனது சினிமா பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகள் வரை தொடரும் என்பது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛தற்போது என் கைவசம் நான்கு படங்கள் உள்ளன. இதில், 2018ல் இந்தியன்-2விலும், 2019ல் ஆச்சார்யாவிலும் கமிட்டானேன். இந்த படங்கள் இரண்டுமே கொரோனா தொற்றினால் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து துல்கர்சல்மானுடன் ஹேய் சினாமிகா மற்றும் நாகார்ஜூனாவுடன் ஒரு படம், தமிழில் டிகே இயக்கும் படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளேன். அந்தவகையில் இப்போதுவரை எனது சினிமா பயணம் பிசியாகவே போய்க்கொண்டிருக்கிறது.
எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் முழு ஒத்துழைப்பு கொடுப்பதால் புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறேன். ஆனால் இந்த பயணம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு செல்லும் என்பது எனக்கே தெரியவில்லை. கணவர் அனுமதி கொடுப்பதுவரை நடிப்பேன். அவர் எப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்த சொல்கிறாரோ அப்போது நிறுத்தி விடுவேன். அதனால் எனது சினிமா கேரியர் கைவசம் உள்ள படங்களோடு முடிவடைகிறதா? இல்லை தொடரப்போகிறதா? என்பது என் கணவர் கையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளர் காஜல் அகர்வால்.