ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக உள்ளது. கடந்த வருட கொரோனா தொற்றின் முதல் அலை ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாவது அலை ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.
கடந்த வருட கொரோனாவிற்கே தியேட்டர்களை சுமார் 8 மாதங்கள் வரை மூடி வைத்திருந்தார்கள். இந்த இரண்டாவது அலையில் கடந்த 20 நாட்களாக தியேட்டர்களை மூடி வைத்திருக்கிறார்கள். இந்த அலையின் தாக்கம் ஜுலை வரையிலும் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு கொரோனா தொற்றால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தால் தான் அதற்கடுத்த சில மாதங்களிலாவது தியேட்டர்களைத் திறக்க நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கெனவே கடந்த வருடம் 8 மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டாலும் ஓரிரு படங்கள் மட்டும் தான் லாபத்தைத் தந்தன.
பல தியேட்டர்களை திறக்காமலேயே வைத்திருந்தார்கள். இந்த வருடமும் அப்படிய நீடித்தால் நூற்றுக்கணக்கான தியேட்டர்களை நிரந்தரமாக மூடும் அபாயம் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். நேரடியாகவும் மறைமுகமாவும் சினிமா தொழிலையும், தியேட்டர்களையும் நம்பி பல குடும்பங்கள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையின் போதே மீள முடியாத தியேட்டர்கள் இந்த இரண்டாவது அலையில் மீள்வது அவ்வளவு எளிதல்ல என்பதுதான் நிதர்சனமான உண்மை.