டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மா, அவரது கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதி சேகரிக்க கேட்டோ என்ற அமைப்பை துவக்கி நேற்று வீடியோ மூலம் நிதி திரட்ட அழைப்பு ஒன்றை வெளியிட்டனர். ரூ.7 கோடி நிதி திரட்ட எண்ணியுள்ள அவர்கள் தங்கள் சார்பில் ரூ.2 கோடி நிதி அளித்துள்ளனர்.
வீடியோவில் அவர்கள் கூறுகையில், “கொரோனா இரண்டாவது அலையில் நமது நாடு போராடிக் கொண்டிருக்கிறது. நமது மருத்துவப் பாதுகாப்பு முறை கடும் சவாலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பாதிப்படையவது எனது இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. அதனால், நானும் விராட்டும் '#InThisTogether' என்ற பிரச்சாரத்தை ஆரம்பித்து கொரோனா நிவாரண நிதியை வசூலிக்க முடிவு செய்துள்ளோம். இந்த நிலைமையிலிருந்து நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வெளியே வருவோம். இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் உதவி செய்ய முன்வாருங்கள். இந்த மோசமான சூழலில் உங்களது உதவி பலரது உயிரைக் காப்பாற்றும்,” என அனுஷ்கா சர்மா, விராட் கோலி நேற்று வேண்டுகோள் விடுத்தார்கள்.
அவர்களது வேண்டுகோளுக்கு ரசிகர்கள் பெரும் ஆதரவைக் கொடுத்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் ரூ.3.6 கோடி நிதி கிடைத்துள்ளதாக அனுஷ்கா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.