கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த் - கேஎஸ் ரவிக்குமார் ஜோடி இணைந்த முத்து, படையப்பா ஆகிய இரண்டு படங்களும் அவர்களது திரைப்படப் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்த படங்கள். அந்த இரண்டு படங்களையும் மிஞ்சும் வகையில் பத்து வருடங்களுக்கு முன்பு இதே நாளில் பூஜை போடப்பட்ட படம் ராணா. படப்பூஜை நடந்த முடிந்ததும் ரஜினிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு நலமுடன் திரும்பினார்.
அதன்பின் அந்தப் படம் அப்படியே கைவிடப்பட்டது. சமீபத்தில் தன்னுடைய தயாரிப்பில் ஆரம்பமான புதிய படத்தின் பூஜையின் போது ரஜினிகாந்த் மீண்டும் ராணா கதையை முழுவதுமாகக் கேட்டார் என கேஎஸ் ரவிக்குமார் சொன்னார்..