இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜெயலலிதாவின் பயோபிக் படமான தலைவி படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளவர் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்.
பாலிவுட்டில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் கங்கனா திரையுலகத்திற்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் ஆகிறது. தன்னுடைய திரையுலகப் பயணத்தை ஷாரூக்கானுடன் ஒப்பிட்டு அவர் இன்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“15 வருடங்களுக்கு முன்பு, இன்று தான் கேங்ஸ்டர் படம் வெளியானது. ஷாரூக்கான் ஜி மற்றும் நான் ஆகிய இருவருடைய கதைகள் தான் மிகப் பெரும் வெற்றிக் கதைகள். ஆனால், ஷாரூக்கான டில்லியிலிருந்து வந்தவர், கான்வென்ட்டில் படித்தவர், அவருடைய பெற்றோர் சினிமாவில் இருந்தனர்.
எனக்கு ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாது, படிப்பு கிடையாது, ஹிமாச்சல் பிரதேசத்தின் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவள். என் வாழ்வை பரிதாபமாக்கிய, என்னுடைய அப்பா, தாத்தா ஆகியோரிடம் சண்டையிட்டு ஒவ்வொரு அடியாக போராடித்தான் வந்தேன். 15 ஆண்டுகளுக்குப் பிறகு, இவ்வளவு வெற்றிக்குப் பின்னும், வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் போராடித்தான் வருகிறேன், ஆனால் முற்றிலும் மதிப்பானவை அவை. ஒவ்வொருவருக்கும் நன்றி,” என தன்னுடைய 15 வருட திரையுலக அனுபவம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.