மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? |
குறுகிய காலத்தில் முன்னணி ஹீரோவாக வளர்ச்சி அடைந்தவர் தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. முன்னணி இயக்குனர்களின் சாய்ஸாக இருக்கும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் டைரக்சனில் இந்தியில் உருவாகும் 'லிகர்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் தன்னை கதாநாயகனாக நடிக்க அணுகிய, சிரஞ்சீவி பட இயக்குனருக்கு கால்ஷீட் இல்லையென கூறி கையை விரித்து அதிர்ச்சி அளித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.
தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா படத்தை இயக்கி வருகிறார் பிரபல இயக்குனர் கொரட்டலா சிவா. இன்னொரு பக்கம் தயாரிப்பிலும் இறங்க தீர்மானித்த கொரட்டலா சிவா, இளம் இயக்குனரான வெங்கி குடுமுலா என்பவரை இயக்குனராக்கி படம் தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக விஜய் தேவரகொண்டாவிடம் கதை சொல்ல நேரம் கேட்டுள்ளனர்..
ஆனால், விஜய் தேவரகொண்டாவோ, தான் இன்னும் மூன்று வருடங்களுக்கு பிசி என்றும் தற்சமயம் கால்ஷீட் இல்லை என்றும் கூறி, கதை கேட்க கூட நேரம் ஒதுக்க மறுத்து விட்டாராம். சிரஞ்சீவி பட இயக்குனருக்கே இந்த நிலைமையா என விஜய் தேவரகொண்டாவின் அதிரடியை பார்த்து திகைத்து போயுள்ளது டோலிவுட்.