ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க விஜய்யின் 65வது படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடந்து வருகிறது. அங்கு படப்பிடிப்புக் குழுவில் இருந்த சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களைத் தனிமைப்படுத்திவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகிறார்கள்.
அடுத்த சில நாட்களில் அங்கு படப்பிடிப்பு முடியும் எனத் தெரிகிறது. அதற்கடுத்து சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பை இங்கு தொடர்ந்து நடத்துவார்களா என்பதும் சந்தேகம்தான். மேலும், வெளிநாட்டிலிருந்து திரும்பி வருபவர்கள் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா பரிசோதனையும் செய்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்கள் மீது சுகாதாரத் துறை தனி கவனம் செலுத்தி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இங்கு விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வாய்ப்பில்லை என்றும், சில வார இடைவெளிக்குப் பிறகுதான் அவர்கள் படப்பிடிப்பைத் தொடர முடியும் என்றும் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.