ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாகி வருகிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை திரையுலகினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். திரையுலகினர் பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்ட சில பிரபலங்களும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
அந்தவகையில் நடிகை ராதிகா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் தான் இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து சட்டசபை தேர்தலில் பிரச்சார் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று செக் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையின் போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோன தொற்று ஏற்பட்டது தெரியவந்தது.
இவரைப்போன்று நடிகை நக்மாவும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்நிலையில் இவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.