இயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |
நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சியை சேர்ந்தவர். ஒரு போலீஸ் அதிகாரியின் மகன். தனது பேச்சு திறன் மற்றும் டைமிங் காமெடி சென்சால் சின்னத்திரை நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார். இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
சினிமா நட்சத்திரமாக இருந்தபோதும் எளிய வாழ்க்கையை விரும்புகிறவராக இருக்கிறார். எளிய உடைகள் அணிவது, எல்லோரிடமும் எளிமையாக பழகுவது அவரது வழக்கமாக உள்ளது. "சினிமா நட்சத்திரத்தின் மகள் என்ற கிரீடம் இல்லாமல் என் மகள் மற்ற குழந்தைகளை போலவே இந்த உலகத்தை புரிந்து வளர வேண்டும்" என்று சிவகார்த்திகேயன் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் டவுன் பஸ்சில் தனது மகளுடன் பயணம் செய்திருக்கிறார். அந்த பயணத்தில் அவர் மகளுக்கு சென்னையை சுற்றிக் காட்டியதோடு, அந்த பகுதியில் என்ன மாதிரியான மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம் என்ன என்றும் கூறியுள்ளார். சிவகார்த்திகேயனை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் அவரது பஸ் பயணத்தை படம் எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். அது இப்போது வைரலாக பரவி வருகிறது.