தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'உலக சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான பெயர்களை அறிவிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது' என ஆஸ்திரேலிய நிருபர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பெயர் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் அவரது கணவரும் பிரபல பாப் நடிகருமான நிக் ஜோனஸ் ஆகியோர் இந்த பெயர்களை அறிவித்தனர்.
'இவர்கள் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடும் அளவுக்கு திரையுலகுக்கு இவர்கள் என்ன பங்களிப்பு அளித்துள்ளனர்' என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு 'இதோ நீங்கள் கேட்ட தகுதி. கடந்த 20 ஆண்டுகளில் 60க்கும் மேற்பட்ட இந்திய படங்களில் நடித்துள்ளேன். அதைத் தவிர ஹாலிவுட்டிலும் நடித்துள்ளேன். அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பே வாட்ச்' என்ற 'டிவி' தொடரிலும் நடித்துள்ளேன்; இது போதுமா' என பிரியங்கா சோப்ரா பதிலளித்துள்ளார். இதையடுத்து நிருபர் பீட்டர் போர்ட் சமூக வலைதளத்தில் தன் தனிப்பட்ட விபர குறிப்புகளை மறைத்துள்ளார். தகுந்த பதில் அளித்துள்ள பிரியங்கா சோப்ராவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.