ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில், ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டியில் தேர்வான திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை, நடிகை பிரியங்கா சோப்ரா, தன் கணவர் நிக் ஜோனஸ் உடன், இணைந்து வெளியிட உள்ளார்.
சர்வதேச திரைப்பட விருதுகளில், மிகச் சிறந்ததாக, ஆஸ்கர் கருதப்படுகிறது. 93வது ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு, 23 பிரிவுகளில், இறுதிப் போட்டிக்கு தேர்வான படங்கள் குறித்த அறிவிப்பு, வரும், 15ம் தேதி, ஆஸ்கர் வலைதளம் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட உள்ளது.
இது குறித்து, பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா, தன் கணவரும், அமெரிக்க பாடகருமான நிக் ஜோனஸ் உடன் இணைந்து, டிக்டாக் வலைதளத்தில் ஒரு, வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ஆஸ்கர் விருது இறுதிப் போட்டிக்கு தேர்வான திரைப்படங்களை, கணவருடன் இணைந்து அறிவிக்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வாய்ப்பு பெருமை அளிப்பதாக, டுவிட்டர் வலைதளத்திலும், பிரியங்கா குறிப்பிட்டு உள்ளார்.
கொரோனா காரணமாக, ஆஸ்கர் விருது வழங்கும் விழா, பிப்., 28லிருந்து, ஏப்., 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.