பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மின்மினிகளாக மின்னும் கண்மணிகள்... சிந்தாமல் சிந்தும் சிரிப்பு சிதறல்கள் என மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நம் மனதைகொள்ளையடித்து, களத்தில் சந்திப்போம்ல் கலக்கிய நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...
* களத்தில் சந்திப்போம் படம் பற்றி
ஜீவா, அருள்நிதி என இரண்டு ஹீரோ. நான் அருள்நிதிக்கு ஜோடி. மஞ்சுமா தான் ஹீரோயின். நான் அருள்நிதியுடன் கொஞ்சம் வந்து போறேன். படம் பார்க்கும் பசங்க நட்பை நினைச்சு பார்ப்பாங்க. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர்.
* எப்படி ஒரு கதையில் நடிக்க முடிவு எடுப்பீர்கள்
படத்தின் தயாரிப்பாளர் யாருன்னு பார்ப்பேன். இன்றைய சூழலில் பெரிய தயாரிப்பாளர்களே அதிக படம் கொடுக்குறது இல்லை. அதனால் தயாரிப்பு அப்புறம்; கதை நல்லா இருக்கான்னு பார்த்த தான் முடிவு எடுப்பேன்.
என்னை டிவியில் பார்த்த பார்வையாளர்கள் இப்போ சினிமாவில் பார்க்கிறார்கள். ரசிகர்கள் ஈஸியா கிடைக்க மாட்டாங்க. டிவி வாய்ப்பை சரியா பயன்படுத்துறேன்னு நம்புறேன், டிவியில் இருந்து வந்து 2 படம் நடிச்சுட்டு போயிட்டாங்கனு தவறான உதாரணமாக விரும்பலை.