ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், அனைவருக்குமே ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் லாக்டவுனில் இருக்கிறேன் என்று சொல்லி கண்கலங்கியிருந்தார் வடிவேலு. இந்த செய்தி சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து தற்போது வடிவேலு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, மெட்டிஒலி சீரியல் மூலம் புகழ் பெற்ற திருமுருகன் அதையடுத்து எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு போன்ற படங்களை இயக்கினார். அந்த இரண்டு படங்களிலுமே வடி வேலுவும் நடித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த படியாக சத்யஜோதி பிலிம்சுக்காக தான் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு-ஆர்.ஜே.பாலாஜி இருவரையும் இணைத்து இயக்கப்போ¡கிறாராம் திரு முருகன்.
அதையடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு நடிக்கயிருப்பதாக இன்னொரு செய்தியும் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் வடிவேலு நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.