'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
தமிழ் சினிமா காமெடியன்களில் தனது உடல்மொழி காமெடியால் பெருவாரியான ரசிகர்களை மனம் விட்டு சிரிக்க வைத்தவர் நடிகர் வடிவேலு. ஆனபோதிலும், தேர்தல் பிரச்சாரம் மற்றும் டைரக்டர்களுடன் விவகாரம் என சில சலசலப்புகளால் கடந்த பல ஆண்டுகளாகவே படவாய்ப்பு இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்த கிடக்கிறார் வடிவேலு. ஒருநாள்கூட ஓய்வில்லாமல் நடித்து வந்த வடிவேலுவிற்கு ஒரு படம்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதே என்று சக சினிமா கலைஞர்களெல்லாம் அவரது நிலையை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் வடிவேலு பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, ''உங்களுக்கெல்லாம் ஒரு வருடம் தான் லாக்டவுன். ஆனால் நான் பத்து வருடம் லாக்டவுனிலேயே இருக்கிறேன். இப்போதும் நடிக்க உடம்பில் தெம்பு உள்ளது, ஆனால் வாய்ப்பு தருவதில்லை என பேசியிருக்கிறார். அதோடு, கர்ணன் படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலையும் கண்கலங்கி பாடினாராம்.