'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
2019-2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதுகளை வழங்கினார். 130 கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், முதல்வரிடம் கலைமாமணி விருதும் பெறும் புகைப்படம் மற்று அந்த விருதினை தனது தாயிடம் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.