ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'நானும் ரவுடிதான்' படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'.
இந்தக் கூட்டணியில் புதிதாக இணைந்துள்ளார் சமந்தா. இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் ஆரம்பமாகியது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இப்படத்தில் பணிபுரிவது குறித்து சமந்தா மிகவும் சந்தோஷத்தில் உள்ளார். அது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது : “வலிமையான விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்களுடன் இணைந்து நடிப்பது எவ்வளவு சந்தோஷமானது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் ஒரு கலவரத்தை ஏற்படுத்தும் என நிச்சயமாகச் சொல்வேன். இந்தப் பார்ட்டியை அசத்திக் கொண்டிருக்கிறீர்கள் விக்னேஷ் சிவன்,” என பாராட்டித் தள்ளுகிறார் சமந்தா.