ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கொரோனா பிரச்சினையில் இருந்து உலகம் இன்னமும் மீண்ட பாடில்லை. கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதால், இப்பிரச்சினை எப்போது தீரும் என்றும் தெரியவில்லை. இதனால் மற்ற துறைகளைப் போலவே திரைத் துறையும் பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்தது தான்.
அதிலும் குறிப்பாக பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் தான் அதிக பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறதாம். கொரோனா பயத்தால் பலர் படப்பிடிப்புக்கு வரத் தயக்கம் காட்டி வருகிறார்கள். சமீபத்தில் பிரதர் படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சினையால் நிறுத்தப்பட்டது. மீண்டும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் பிரமாண்ட படமொன்றில் நடித்து வரும் நாயகனும் இப்போதைக்கு படப்பிடிப்பிற்கு வரமுடியாது எனத் தெரிவித்து விட்டாராம். ஏற்கனவே மற்றொரு களத்தில் பரபரப்பாக இயங்கி வரும் அவர், தேவையில்லாமல் படப்பிடிப்புகளுக்குச் சென்று உடல்நிலையைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என முன்னெச்சரிக்கையாக இப்படி முடிவெடுத்து விட்டார் போலும்.
ஆனால் இயக்குநர் அப்படியில்லை. இந்தப் படத்தால் வேறு படங்களில் ஒப்பந்தமாக முடியாமல் தவித்து வந்தார். அதனால்தான் நாயகன் இல்லாமல் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்க தயாரிப்பு முடிவு செய்து விட்டதாம்.