ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
மாடலிங் துறையில் இருந்த ஆரவ், பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னர் ஆனது முதல் பிரபலமானார். தொடர்ந்து சரண் இயக்கிய மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்., படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனார். தற்போது ராஜபீமா உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் இவரது வீட்டில் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.
ஆரவ்வின் தந்தை டாக்டர் கே.நிலாமுதீன், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இன்று(டிச., 20) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அன்னாரது இறுதிச்சடங்கு நாகர்கோவிலில் உள்ள அவரது சொந்த ஊரில் நடக்கிறது. தந்தையின் மறைவுக்கு நடிகர் ஆரவ்விற்கு பலரும் தங்களது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.