ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் |
ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியான 'வர்மா' படத்திற்குப் பிறகு இயக்குனர் பாலா புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் படம் மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்று பேசப்பட்டு வந்தது.
முதலில் சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகியோர் நடிக்கப் பேச்சு வார்த்தை நடந்ததாகச் சொன்னார்கள். அடுத்து உதயநிதி ஸ்டாலின், அதர்வா, ஜி.வி.பிரகாஷ் என்று மாற்றினார்கள். இப்போது மூன்று பேர் ஹீரோ என்பது மாறி அதர்வா, ஜி.வி.பிரகாஷ் இருவர் மட்டுமே ஹீரோ என்கிறார்கள்.
இப்படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் சம்மதம் சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல். அது பற்றி தகவல் வெளியானதுமே மீம்ஸ்களும் வெளியாக ஆரம்பித்துவிட்டன.
படத்தின் பாடலுக்கான இசைப் பதிவில் பாலாவிடம் முதல் பாடல் சிச்சுவேஷன் எங்கே சுவிட்சர்லாந்திலா என ரஹ்மான் கேட்க, இல்லையில்லை சுடுகாட்டில் என பாலா பதிலளிப்பதாக ஒரு மீம் வாட்சப்பில் பரவி வருகிறது.
இளையராஜா இசையில் படங்களை இயக்க எப்போதும் ஆசைப்படும் பாலா, தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் பக்கம் பாய்வதின் ரகசியம் என்ன என கோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்களாம்.