மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! |
பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட், கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, கொரோனா தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பலதரப்பட்ட மக்களுக்கு, தனது சொந்த செலவில், இப்போது வரை நிவாரண உதவிகள் செய்து வருகிறார்.. இப்படி உதவி செய்வதற்காகவே, தனது சொத்துக்களை, பத்து கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்தார் என சமீபத்தில் கூட ஒரு செய்தி வெளியானது.. அந்தவகையில், இவரது தன்னலம் கருதாத சேவைகளை கவுரவப்படுத்தும் விதமாக, ஆந்திராவில் உள்ள சரத்சந்திர ஐஏஎஸ் அகாடமி, சரத்சந்திர கல்லூரி, சரத்சந்திர ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில், ஒரு துறைக்கு சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேற்கத்திய ரயில்வே நிர்வாகமும், சோனு சூட்டை கவுரவப்படுத்தும் விதமாக, அவரது பங்களிப்பு ரயில்வேயில் ஏதோ ஒருவகையில் இருக்கவேண்டும் என விரும்பியது. இதனையடுத்து, ரயில்வே நடைபாதைகளை கவனமின்றி கடக்கும் பயணிகள் மற்றும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, விபரீதம் தெரியாமல், ரயில்வே ட்ராக்கை கடப்பதால் ஏற்படும் அபாயங்கள் பற்றியும், அவற்றை கடப்பதற்கு பாலங்களை பயன்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் பயணிகளுக்கு அறிவுத்தும் விதமாக சோனு சூட்டின் குரலை பதிவு செய்து ரயில் நிலையங்களில் ஒலிபரப்ப அவருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.