இளம் கன்னட நடிகர் கொரோனவுக்கு பலி | சிறுமிக்கு பாலியல் தொல்லையா? : காமெடி நடிகர் டேனியல் பற்றி இணையத்தில் பரபரப்பு | அரசியல் ரசிகர்களுக்கு மே 2 : அஜித் ரசிகர்களுக்கு மே 1 | ஐதராபாத்தில் ரத்தாகும் படப்பிடிப்புகள் : 'அண்ணாத்த' நிலை என்ன ? | இன்று முதல் 3 காட்சிகள் மட்டுமே... | "மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் |
ரஜினி, கமல் ஆகிய இருபெரும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விமர்சிப்பவர்கள், சிவாஜி கட்சி ஆரம்பித்ததையும் அதில் அவர் அனுபவத்தையும் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள். அதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சமூக வலைத்தளங்களில் சிவாஜி கடுமையாக கிண்டல் செய்யப்படுகிறார். இதை கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவாஜி இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய வரம். பாடிக்கொண்டிருந்த சினிமாவை பேசவைத்ததிலும் திரை நடிப்பு கலையில் ஒரு புத்திலக்கணம் வகுத்தவர். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி தமிழ்த்திரை அப்படியொரு கம்பீரமான குரல் கேட்டதில்லை . சிம்மக்குரல் என்பது சும்மா கொடுத்த பட்டமன்று .
சமீபத்தில் பொழுதுபோக்கு என்ற பெயரில், அவர் குரலையும் நடிப்பையும் மலிதாய் பயன்படுத்தியது அவர் பால் அன்பும், மரியாதையும் கொண்ட அத்தனை பேர் மனதையும் புண்படுத்திக் கொண்டிருக்கிறது.
தேர்தல் காலமது நெருங்கி வருகின்ற இவ்வேளையில் , திரைத்துறையில் இருந்து பலரும் அரசியல் களமிறங்குகின்றன . சிவாஜி ஐயாவின் அரசியல் பயணத்தோடு ஒப்பிட்டு, அரசியல் விமர்சகர்கள் கீழ்த்தனமாய் அவரை விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது .
அவரது அரசியல் பயணம் நீண்ட வரலாறு. பெரும் தலைவர்களோடு பழகியும், புரிந்தும் வந்தவர் . அவர் என்றும் கள்ளம் கபடமற்று மக்களுக்கானவராய் இருந்து வந்தார் . இனியும் அவர் பெயரை கண்டபடி பயன்படுத்தாதிருக்க வேண்டுமென்று ஒட்டுமொத்த நடிகர் சமூகத்தின் சார்பாய் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு நாசர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.