ஆகஸ்ட் 12ல் லத்தி வெளியீடு | சிவாஜி குடும்பத்தில் இருந்து அறிமுகமாகும் மற்றொரு நடிகர் | 20 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்துடன் இணையும் மகாநதி ஷங்கர் | பத்து தல படத்திற்கு தயாரான சிம்பு | சேரன் இயக்கத்தில் ஆரி, திவ்ய பாரதி நடிக்கும் புதிய வெப்சீரிஸ் | விஜயின் 67வது படம்: உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ் | விடுதலை படத்திற்காக அமைக்கப்பட்ட ஒரு பெரிய கிராமப்புற செட்! | வெளிநாட்டில் பட்டம் பெற்ற சரத்குமார் - ராதிகாவின் மகன் | சிறு பட்ஜெட் படங்களை வெளியிட உதயநிதிக்கு சீனு ராமசாமி கோரிக்கை! | நடிகையாக களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரி! |
தமிழ் சினிமாவின் அழகிய காதல் ஜோடி எனப் பெயரெடுத்தவர்கள் பிரசன்னா, சினேகா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். குடும்பப்பாங்கான அழகான நடிகையான சினேகாவின் கணவராக இருந்தாலும் பிரசன்னா தீவிர சிம்ரன் ரசிகர். அதை பல சந்தர்ப்பங்களில் அவரே தெரிவித்திருக்கிறார்.
இன்று(நவ., 24) சிம்ரன் அவருடைய டுவிட்டரில் பட்டுப்புடவையுடன் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். “சேலையின் நேர்த்தியும், அதன் தரமும் ஒப்பிட முடியாதவை. சேலையில் முதல் பார்வையிலேயே என்னுடைய காதல்,” எனவும் பதிவிட்டிருந்தார்.
அந்த டுவீட்டைப் பார்த்ததும் பிரசன்னா, 'மேம்...போங்க மேம்...'” என 'ஹார்ட்டின்' விட்டிருக்கிறார். பிரசன்னாவின் 'அழகில் மயங்கிய' டுவீட்டைப் பார்த்து ரசிகர்கள், மனைவி சினேகாவிடம் சிக்கப் போறீங்க என கிண்டலடித்துள்ளனர்.