சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
கடந்த மார்ச் மாதம் இந்தியாவுக்குள் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்றின் பாதிப்பு ஓரளவு குறைந்தது போல தென்பட்டாலும், இன்னும் முற்றிலுமாக நீங்கிவிடவில்லை.. இந்தநிலையில் சல்மான்கானுக்கு கொரோனா பாதிப்பு என்பது போல ஒரு செய்தி பரவியது.. அதாவது சல்மான்கானின் டிரைவர் மற்றும் அவரது இரண்டு பணியாளர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாசிடிவ் என்பது உறுதியானது.
இதை தொடர்ந்து சல்மான்கான் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் நல்லவேளையாக அவர்களுக்கு கொரோனா இல்லை என நெகடிவ் ரிசல்ட் வந்தது. இருந்தாலும், சில நாட்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் இரண்டு வாரங்களுக்கு சுய தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறாராம் சல்மான்கான், அதேசமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது பணியாளர்களுக்கான சிகிச்சைக்கு உரிய ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் சல்மான்கான்