சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
மறைந்து பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை நினைவு கூறும் வகையில் தென்னிந்தி சினிமா, சின்னத்திரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் ரிக்கார்ட்டிங் ஸ்டூடியோ திறக்கப்படும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி நேற்று அதன் திறப்பு விழா நடந்தது.
இதனை டப்பிங் யூனியன் தலைவர் ராதாரவி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது எஸ்.பி.பாலசுப்பிரணியத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவர் இந்த சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது இந்த சங்கத்திற்கு பெருமை. அவர் பெயரில் இந்த ஸ்டூடியோ திறக்கப்படுவது, அவருக்கு செய்யும் மரியாதை மட்டும் அல்ல. நமக்கு நாமே செய்து கொள்கிற மரியாதை, பெருமை. என்றார்.