சுசீந்திரன் - ஜெய் இணையும் குற்றமே குற்றம் | நீட் தேர்வு பின்னணியில் உருவாகியுள்ள இ.பி.கோ 306 | ராஷ்மிகாவால் ஹிந்திக்கு செல்லும் புஷ்பா | மீண்டும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி | வலிமை அப்டேட்- கேட்டு முருகனிடம் வேண்டுகோள் வைத்த அஜித் ரசிகர்கள் | மருத்துவமனையில் இருந்து கமல் டிஸ்சார்ஜ் | ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை | சினிமா வசூல் - ரஜினியை முந்தும் விஜய் | கணக்கை முடக்கியது: கங்கனாவுக்கு டுவிட்டர் நிர்வாகம் எச்சரிக்கை | போதை பொருள் வழக்கில் ஜாமீன்: 140 நாட்களுக்கு பிறகு விடுதலையாகிறார் ராகிணி |
தமிழ்த் திரையுலகத்தில் சினிமா தியேட்டர்கள் கொரானோ தொற்று காரணமாக மூடப்பட்டதால் ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாகின. இதுவரை வெளிவந்த படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்தாத நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஓடிடியில் வெளிவந்த சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' ரசிகர்களை திருப்திப்படுத்திய படமாக அமைந்தது.
படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் படக்குழுவினரைப் பாராட்டி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தெலுங்கு நடிகராக மகேஷ் பாபு சேர்ந்துள்ளார்.
“சூரரைப் போற்று, என்ன ஒரு எழுச்சியூட்டும் படம். அற்புதமான இயக்கம், அற்புதமான நடிப்பு. டாப் பார்மில் சூர்யா. பிரகாசிக்கிறீர்கள் பிரதர். மொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார்.
“மிகவும் நன்றி பிரதர், டன் நன்றிகள், 'சரக்குவாரி பாட்டா'வுக்காகக் காத்திருக்கிறேன்,” என மகேஷ்பாபுவுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.