பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்தலை ஒத்தி வைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23ம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலில் என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை. வெளியூர்களில் உள்ள சங்கத்தின் உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். ஆனால் தேர்தலுக்கு முதல் நாள் வரை வாக்களிக்கும் படிவம் எனக்கு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில் நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், மற்றும் பொருளாளர் கார்த்தி சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. மூன்று மாதத்துக்குள் மீண்டும் புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரித்து தேர்தலை நடத்த வேண்டும்.
இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்படுகிறார். மேலும் நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை நடிகர் சங்க நிர்வாகத்தை தற்போதைய சிறப்பு அதிகாரியான கீதாவே தொடர்ந்து கவனிப்பார் என உத்தரவிட்டு தமிழக அரசின் சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பினர் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், புதிய தேர்தல் அறிவிப்பாணை வெளியிட வேண்டும், உறுப்பினர்களைச் சேர்த்து வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும், தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், தேர்தல் நடைமுறைகளை 3 மாதத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வராமல் தொடர்ந்து மனுக்களை எதிர்த்து மனு என்கிற ரீதியில் சென்று கொண்டிருந்தால் வழக்கை விசாரித்த நீதிபதிகள் இனி இந்த வழக்கை நாங்கள் விசாரிக்கப்போவதில்லை என்று தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதை தொடர்ந்து தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய பென்ஞ் விசாரிக்க உத்தரவிட்டார்.
இவர்கள் முன் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இருதரப்பினரும் தங்கள் வாதங்களுடன் தயாராக இருந்தனர். ஆனால் நீதிபதிகள் வழக்கை நவம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்து அதுவரை தேர்தலை நடத்தவும் தடையை நீட்டித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு இனி கானொலி காட்சி மூலம் நடக்கும் என்று தெரிகிறது.