காப்பி அடிக்கிறேனோ, தமன் கோபம் | விஜய்க்கு சிலை வைத்த கர்நாடக ரசிகர்கள் | பிக்பாஸ் வெற்றியாளர்கள் சாதித்தார்களா? | ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை | ஒழுங்குமுறையற்ற ஓ.டி.டி. தளங்கள் : குடும்ப கட்டமைப்பு சிதையும் அபாயம் | கமலுக்கு காலில் அறுவை சிகிச்சை : நலமாக இருப்பதாக மகள்கள் அறிக்கை | 'மாஸ்டர்' தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி வசூல் | பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் |
தமிழ்த் திரையுலகில் கடந்த 50 வருடங்களாக பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர் எஸ்பிபி. அவருடன் இணைந்து டூயட் பாடிய பாடகிகள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.
அப்படி அவருடன் இணைந்து டூயட் பாடல் ஒன்றை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பாடியிருக்கிறார். 1973ம் ஆண்டு வெளிவந்த 'சூரியகாந்தி' என்ற படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் 'நான் என்றால் அது அவளும்' என்ற பாடலை எஸ்பிபி, ஜெயலலிதா இணைந்து பாடியுள்ளனர்.
அதன்பின் 1974ம் ஆண்டு டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் வைரம்.
டி.ஆர். பாப்பா இசையில் அந்தப் படத்தில் இடம் பெற்ற இரு மாங்கனி போல் இதழோரம்... என்ற பாடல் எஸ்பிபி, ஜெயலலிதா இருவரும் பாடியிருக்கிறார்கள்.
ஜெயலலிதா இதற்கு முன்பு அம்மா என்றால் அன்பு என்ற பாடலைப் பாடிய தகவல்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். இப்போது எஸ்பிபியுடன் இணைந்து பாடிய இப்பாடல் பற்றிய தகவலும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
எஸ்பிபி, ஜெயலலிதா டூயட் பாடல் இளமையான ஒரு பாடலாக அமைந்த ஒன்று.