மாஸ்டர் படக்குழு வெளியிட்ட பொங்கல் கொண்டாட்டம் | கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை | வெற்றிமாறன் படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை | தமிழ் புத்தாண்டில் 'டாக்டர்' | முதல்வர் வெளியிடும் 'நாற்காலி' பாடல் | தெலுங்கு ஹீரோக்களுக்கு நான் லக்கி ஹீரோயின் : -ஸ்ருதிஹாசன் பெருமை | அய்யப்பனும், கோஷியும் ரீமேக்கில் சமுத்திரகனி | யுவனுடன் இணைந்த ராஷ்மிகா மந்தனா | படம் வெளிவரும் முன்பே மரணடைந்த ஹீரோ | சலார் படப்பிடிப்பு தொடங்கியது |
சுவர்ணலதா இறந்து இன்றோடு 10 ஆண்டாகிறது. தமிழ் திரையிசை உலகில் இசையாகவே வாழ்ந்து இளம் வயதிலேயே இசையிலேயே கரைந்து போனவர் அவர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் நீதிக்கு தண்டனை என்ற படத்தில் ''சின்னஞ்சிறு கிளியே கண்ணமா...'' என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார். முதல்பாட்டிலேயே கே.ஜே.யேசுதாஸ் உடன் இணைந்து பாடினார். இளையராஜாவின் ஆஸ்தான பாடகிகளான எஸ்.ஜானகி, சித்ராவுக்கு மாற்றாக ஒரு பாடகி தேவைப்பட்டபோது கச்சிதமாகப் பொருந்திப் போனவர் சுவர்ணலதா.
குரு சிஷ்யன் படத்தில் வரும் உத்தமபுத்திரி நானு என்ற பாடல் தான் இளையராஜா இசையில் சுவர்ணலதாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு. அதன்பின் அவர் பாடிய பல பாடல்கள் செம ஹிட்டாகின. 'அலைபாயுதே' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடல் இன்றும் எங்கும் ஒலித்து கொண்டே இருக்கிறது. "மாலையில் யாரோ மனதோடு பேச" பாடல் காதலில் விழுந்த ஒவ்வொரு பெண்ணின் தேசிய கீதமாக இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'கருத்தம்மா' படத்தில் இவர் பாடிய போறாளே பெண்ணுத்தாய் பாடல் தேசிய விருதை பெற்று தந்தது. இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 7000 பாடல்கள் பாடியிருக்கிறார். இளம் வயதிலேயே இசையிலேயே கரைந்து போனாலும் அவர் பாடிய பாடல்கள் இன்றும் பலருக்கு இனிய கீதமாக ரீங்காரமாய் ஒலித்து கொண்டே இருக்கிறது. காலத்தால் அழியாத பாடல்களில் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சுவர்ணலதா
சுவர்ணலதாவின் முத்தாய்ப்பான சில பாடல்கள்
அடி ராக்கம்மா கைய தட்டு...
மாலையில் யாரோ மனதோடு பேச...
மாசி மாசம் ஆளான பொண்ணு...
ஆட்டமா தேரோட்டமா...
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட...
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல்...
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே...
மலைக்கோவில் வாசலிலே...
மல்லிகை மொட்டு....
நீ எங்கே....
சொல்லிவிடு வெள்ளி நிலவே...
போறாளே பொண்ணுத்தாய்...
முக்காலா முக்காபுல்லா...
மாயா மச்சிந்திரா...
மெல்லிசையே....
பூங்காற்றிலே...
எவனோ ஒருவன்...