டாப்ஸி படத்தில் கதாநாயகியாக சமந்தா | விக்ரம் படம் பார்த்துவிட்டு கமலை வாழ்த்திய வானதி சீனிவாசன் | மலையாள இயக்குனர் தமிழில் இயக்கும் படத்தில் ஹீரோவாக சரத்குமார் | உருக்கமாக பதிவிட்டு அனுதாபம் தேடும் பாலியல் புகார் நடிகர் | ஆதித்த கரிகாலன், வந்தியத் தேவன் வருகை : மற்றவர்கள் எப்போது ? | உதயநிதியின் அடுத்த படத் தலைப்பு 'கழகத் தலைவன்' ? | எதற்கும் அஞ்சமாட்டேன் ; உயிரை விடவும் தயார் : காளி போஸ்டர் சர்ச்சைக்கு லீனா மணிமேகலை பதில் | கைதி படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குநர் திடீர் மாற்றம் | பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் : அறிமுக நடிகை அதிர்ச்சி தகவல் | ஹிந்தி விக்ரம் வேதா பட்ஜெட் அதிகரிப்பா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் |
போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கன்னட நடிகையர், லாக் - அப்பில், நள்ளிரவில் தகராறில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும் சப்ளை தொடர்பாக பிரபல கன்னட நடிகைகள் ராகினி திவிவேதி, சஞ்சனா கல்ராணி இருவரையும், சி.சி.பி., எனப்படும், மத்திய குற்றப் பிரிவு போலீசார், பெங்களூரில் கைதுசெய்தனர். இவர்கள் சாம்ராஜ்பேட்டையில் உள்ள சி.சி.பி., அலுவலகத்தில் லாக் - அப்பில், ஒரே அறையில் வைக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவு ஒரு மணியளவில், விளக்கு அணைப்பது தொடர்பாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் போட்ட கூச்சலைக் கேட்டு, அங்கு வந்த மகளிர் போலீசாரையும், அவர்கள் மிரட்டிய தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், போதைப் பொருள் கிடைத்தது எப்படி; அது யார், யாருக்கு சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து, இருவரிடமும் சி.சி.பி., உயரதிகாரிகள் துருவித் துருவி விசாரித்தனர்.